நடுத்தர மக்களின் வாழ்க்கை வரலாறை நம் கண்முன்னே கொண்டு வருவதுதான் இந்தக் கதைகள். நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் அவர்களின் பொருளாதாரமே. இந்த உலகின் பொருளாதாரமே நடுத்தர மக்களின் பொருளாதாரத்தையே ஆணிவேராகக் கொண்டு அமைந்துள்ளது. இவர்கள் வாழ்க்கையில் சுயநலம் மிக்கவர்களாக, ஆடம்பரத்தில் மோகம் கொண்டவர்களாக, மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தை மேற்கொள்பவர்களாகக் காணப்பட்டாலும் இவர்கள் தங்கள் வரவையும் செலவையும் சரிக்கட்டி தங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்துவது மிகவும் வியக்கத் தக்க விஷயமே.