மனம் போன போக்கிலே கடந்த ஆறு வருடங்களாக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. நீண்ட நாவல் எழுத வேண்டும் என்ற என் கனவை நினைவாக்க நான் முன்னோட்டம் பார்க்கும் ஆழம் இந்த புத்தகம். நிலவைப் போல் பளிச்சென்று மின்னாது இந்த புத்தகம். விண்மீன் போல கூட்டமாக கூட மின்னாது. மின்மினி போல் ஒற்றை புள்ளியாய் உங்கள் மனதில் ஒரு நொடி மின்னினால் போதும். அதுவே எனது அடுத்த படைப்புக்கு நீங்கள் பற்ற வைக்கும் நெருப்பு. பற்ற வையுங்கள். என்றும் பற்றுடன், உங்கள் உதய குமாரன்