கடலின் ஒரு துளியும், கடல் என்றே அழைக்கப்படுகிறது. அதுபோலவே பிரபஞ்சம் எனும் எல்லையற்ற பரம்பொருளின் ஒரு துளியான ஆன்மாவும் பரம்பொருள் அல்லது கடவுள் என்றே சொல்ல வேண்டும். அத்தகைய கடவுள் தன்மை வாய்ந்த ஆன்மாவானது மனித பிறப்பெடுத்து, தன் கர்மவினைகளுக்கு உட்பட்டு அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை அனுபவித்து பக்குவப்பட்டு மீண்டும் தன் தாய் வீடான கடவுளிடம் எங்ஙனம் போய் சேர்கிறது என்பதை விளக்கும் ஒரு நூலாக 'ஆன்மா கடந்து செல்லும் பாதை' எழுதப்பட்டுள்ளது. இல்லறம், துறவறம் என்ற இரண்டு உன்னத மார்க்கங்களையும், அதன் மூலம் மனிதர்கள் பக்குவமடைவது பற்றியும் அடியேனால் இயன்றவரை விளக்கமாக எழுதியுள்ளேன். இந்நூலை படிப்பதன் மூலம் ஒவ்வொருவரும் நமது முன்னோர்களால் நமக்காக வகுத்து கொடுக்கப்பட்டுள்ள வாழ்வின் நெறிமுறைகள், அதை கடைபிடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு கிட்டும் பலன்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.