தென் நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்ட சோழப் பேரரசருள் சிறந்தவர் இராஜராஜனும் அவன் செல்வ மைந்தன் இராஜேந்திரனுமே ஆவர். இராஜராஜன் அமைத்த சோழப் பெருநாட்டைப் பலப்படுத்திய பெருமை இராஜேந்திரனுக்கு உரியது. அத்துடன் அப்பெருமகன் கங்கை வரை தன் ஆற்றலைக் காட்டியவன்; கப்பற்படையைச் செலுத்திக் கிழக்கு நாடுகளை வென்றவன். தமிழர் போரில் சிறந்தவர்-பேரரசைக் கட்டியாளத்தக்க திறமை உடையவர் என்பதை உலகறியச் செய்த பெருவீரன் இராஜேந்திரனே ஆவன். அப்பெருமகனது வரலாறு இக்காலத் தமிழ் மாணவர்க்கு மிகவும் தேவையானது. இஃது, அவர்களுக்குத் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் நாட்டின்மீது பற்றையும் தமிழ் வரலாற்றில் ஆர்வத்தையும் தமிழர் முன்னேற்றத்தில் ஊக்கத்தையும் அளிக்க வல்லது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.