கொரிய மொழிக்கும் நம்முடைய தமிழ் மொழிக்கும் வரலாற்று ரீதியாக நிறைய தொடர்புகள் உள்ளது. நிறைய வார்த்தைகள் மற்றும் சொற்கள் தமிழ் மொழியின் மூலமாகவே வந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ் மொழியின் பெருமையை கற்க கற்கத்தான் அதன் சுவை தெரியும், அது மாதிரிதான் கொரிய மொழியும் பேசும் பொழுது அதன் சுவையை நாம் உணரலாம். கொரிய மொழி முதலில் சீன மொழி வடிவமைப்பிலே இருந்து வந்தது, ஆனால் அது படிப்பதற்கும் எழுதவதற்கும் மிகவும் சிரமமாக இருந்து வந்தது. அதற்க்கு பின்னர் கொரிய மொழியையை முதன் முதலில் 1443-ம் ஆண்டு கிங் செஜோங் என்பவர் சில அறிஞர் பெருமக்களுடன் சேர்ந்து உருவாக்கினார்.…mehr
கொரிய மொழிக்கும் நம்முடைய தமிழ் மொழிக்கும் வரலாற்று ரீதியாக நிறைய தொடர்புகள் உள்ளது. நிறைய வார்த்தைகள் மற்றும் சொற்கள் தமிழ் மொழியின் மூலமாகவே வந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ் மொழியின் பெருமையை கற்க கற்கத்தான் அதன் சுவை தெரியும், அது மாதிரிதான் கொரிய மொழியும் பேசும் பொழுது அதன் சுவையை நாம் உணரலாம். கொரிய மொழி முதலில் சீன மொழி வடிவமைப்பிலே இருந்து வந்தது, ஆனால் அது படிப்பதற்கும் எழுதவதற்கும் மிகவும் சிரமமாக இருந்து வந்தது. அதற்க்கு பின்னர் கொரிய மொழியையை முதன் முதலில் 1443-ம் ஆண்டு கிங் செஜோங் என்பவர் சில அறிஞர் பெருமக்களுடன் சேர்ந்து உருவாக்கினார். அதற்க்கு பின்னர் இந்த மொழி மிகவும் எளிய முறையில் நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் UNESCO அமைப்பு மொழியியல் துறையில் சாதிப்பவர்களுக்கு கிங் செஜோங் பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதே போல் அக்டோபர் மாதம் தேதி கொரிய மொழிதினமாக கொண்டாடப்படுகிறது. கொரிய மொழியை நாம் தாய் மொழி தமிழில் கற்றுக்கொள்ள வெளிவரும் முதல் புத்தகம் இதுவாகும். இந்த புத்தகம் கொரிய மொழியை புதியாய் கற்பவர்களுக்கு மிக எளிய முறையில் தமிழ் வழி மூலம் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தகத்தில் கொரிய எழுத்துக்கள் பற்றியும் அதை நாம் எவ்வாறு உச்சரிக்க வேண்டும், எவ்வாறு எழுத வேண்டுமென்று அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கபட்டுள்ளது. மேலும் வாக்கிய மற்றும் இலக்கண அமைப்பு அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கொரிய மொழியை கற்றல் வழிமுறையின் அடிப்படையில் நான்கு அல்லது ஐந்து நிலைகளாக பிரிக்கலாம். இந்த புத்தகம் முதல் நிHinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
நான் முனைவர் ஹரிபாலன் பெருமாள்சாமி. நான் கொரியாவில் கடந்த 15 வருடமாக சியோல் மாநகரில் வசித்து வருகிறேன். நான் தற்பொழுது ஹன்யாங் பல்கலைகழகத்தில் புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு துறையில் ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மொழி மீது கொண்டுள்ள தீராத அன்பின் காரணமாக தமிழ் மொழி சார்ந்த தொன்மைகளை நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். இங்கு கொரியாவில் வாழும் மக்களும், அவர்களின் கலாச்சாரமும் அவர்கள் பேசும் கொரிய மொழியும் என்னை மிக வெகுவாக கவர்ந்தது. அதன்பொருட்டு நான் கொரிய மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கொரிய மொழியை கற்க, கற்க என்னை அறியாமல் மேலும் ஒரு ஈர்ப்பு உருவாகியது. அதனை தொடர்ந்து தமிழ்-கொரிய மொழியில் இடையேயுள்ள ஒற்றுமையை அலசி ஆராய்ந்து பல வியப்புள்ள தகவல்களை கண்டறிந்தேன். தமிழ்-கொரிய மொழியில் இடையேயுள்ள ஒற்றுமை, இலக்கணச் சான்று, கலாச்சராம் என நிறைய விடயங்கள் கண்டறிந்தேன். இவ்வளவு விடயங்கள் இருக்க இதை நான் வெளி உலகிற்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு கொரியா தமிழ் நண்பர்கள் இணைய வழி ஊடகம் மூலம் இலவசமாக கொரிய மொழியை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த 2009 முதல் தமிழ் மொழியை இங்குள்ள கொரிய மக்களுக்கும், கொரிய மொழியை தமிழ் மக்களுக்கும் கட்டணம் ஏதுமின்றி கற்றுக்கொடுத்து வருகிறேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ள, கொரிய மொழியில் நான் எனது கொரியா மாணவருடன் சேர்ந்து ஒருபுத்தகம் எழுதியுள்ளேன். மேலும் இப்பொழுது கொரிய மொழியை தமிழ் மொழி மூலம் எப்படி கற்றுக்கொள்வது என்று புத்தகம் எழுதியுள்ளேன். மேலும் தமிழ்-கொரிய மொழிகளுக்கு இடையேயுள்ள, இன்றளவும் பயன்பாட்டில் உள்ள ஒத்த அர்த்தமுடைய வார்த்தைகளை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். விரைவில் அதுபற்றியான
Es gelten unsere Allgemeinen Geschäftsbedingungen: www.buecher.de/agb
Impressum
www.buecher.de ist ein Internetauftritt der buecher.de internetstores GmbH
Geschäftsführung: Monica Sawhney | Roland Kölbl | Günter Hilger
Sitz der Gesellschaft: Batheyer Straße 115 - 117, 58099 Hagen
Postanschrift: Bürgermeister-Wegele-Str. 12, 86167 Augsburg
Amtsgericht Hagen HRB 13257
Steuernummer: 321/5800/1497
USt-IdNr: DE450055826